×

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

செங்கல்பட்டு: கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானான். செங்கல்பட்டு அடுத்த மலாலிநத்தம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (15). இவன், செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் நண்பர்கள் 5 பேருடன் கிணற்றில் குளிப்பதற்காக சஞ்சய் சென்றான். அப்போது, நீச்சல் தெரியாமல் கிணற்றில் மூழ்கி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் அவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Sanjay ,Malalinantham ,Ivan ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...